search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகிரி மாவட்டம்"

    • ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் கட்சி கொடியேற்றி அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக 5-வது முறை பொறுப்பேற்றுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக 5-வது முறை பொறுப்பேற்றுள்ள பா.மு.முபாரக், ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் கட்சி கொடியேற்றி அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, தொரை,

    உதயதேவன், மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், காந்தல் ரவி, கர்ணன், எல்கில் ரவி, சோலூர் பேரூராட்சி செயலாளர் பிரகாஷ்குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமாராஜன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ராம்குமார், மாயன், பேரூராட்சி தலைவர்கள் ஜெககுமாரி, கௌரி, சத்யவாணி, ஹேமமாலினி, ஊட்டி நகர பொருளாளர் அணில்குமார்,

    மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், தம்பி இஸ்மாயில், முத்து, தொமுச கவுன்சில் செயலாளர் ஜெயராமன், எல்.பி.எப் முருகன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், மேத்யூஸ், மெல்ரோஸ் செல்வராஜ், வெங்கடேஷ், மார்கெட் ரவி, ராஜூ, ராமன், வெங்கடேஷ், குண்டன், குரூஸ், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கீதா, நாகமணி, விஷ்னுபிரபு, கஜேந்திரன், ரகுபதி, வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக்கிற்கு குன்னூர் நகர தி.மு.க. சார்பில் பஸ் நிலைம் அருகில் நகர தி.மு.க. செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான ராமசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பா.மு. முபாரக் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

    இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், பொது குழு உறுப்பினர் சதக்கதுல்லா, குன்னூர் நகர்மன்ற தலைவர் ஷிலாகேத்ரின், நகர்மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா, நகர திமுக துணை செயலாளர் முருகேஷ், நகர பொருளாளர் ஜெகநாத்ராவ், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 91 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
    • நீலகிரி மாவட்டத்தில் மின்சாரத்துறை சாா்ந்த 200 பணியாளா்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்தது. நேற்றும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்பட அணைபகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.தொடர் மழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்த தொடர் மழையால் கூடலூர் வட்டாரத்தில் புஞ்சங்கொல்லி, கூடலூர் நகரம், ராக்வுட், ஊட்டி வட்டாரத்தில் அண்ணா காலனி, மினிட்மந்து, காந்திபேட்டை, கேத்தி பாலாடா, இத்தலார் கிண்ணக்கொரை, மஞ்சூர், குன்னூர் வட்டாரத்தில் சேலாஸ், கோத்தகிரி வட்டாரத்தில் மைனலா மட்டம் உள்ளிட்ட இடங்களில் 79 மின் கம்பங்கள் சேதமானது.மின்வாரிய ஊழியர்கள் சேதமான மின்கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் மழைக்கு 61 வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. இதுதவிர கூடலூர், பந்தலூர், ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    தற்போது மழை சற்று ஓய்ந்திருப்பதால் மாவட்டம் முழுவதும் மீட்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மண்குவியல்களும் அகற்றப்பட்டது.சேதமான மின்கம்ப ங்களை மாற்றி அமைத்து மின்சாரம் வினியோகிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. கூடலூர் மங்குழி ஆற்றில் சேதம் அடைந்த பாலம் உள்ள பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்ப டுத்தப்பட்டுள்ளன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலமாக சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளை அமைச்சர்கள் ராமச்சந்திரன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், செந்தில்பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் தென்மேற்கு பருவ மழை தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா், ராமசந்திரன் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 91 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. எதிா்காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மண் சரிவு மற்றும் வெள்ள சேதங்கள் ஏற்படுவதை தவிா்க்க பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை முழுமையாக ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பேரிடா் மீட்பு படையின் 80 வீரா்கள் கூடலூா் பகுதிக்கு வரவழைக்க ப்பட்டுள்ளனா். நீலகிரியில் அடுத்த 2 நாள்களுக்கு கன மழை பெய்யும் என எச்சரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறையினரும் தயாா் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    மின் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையினால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் சாய்ந்துள்ளன. சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் தாழ்வாக செல்லக்கூடிய 189 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மின்சாரத்துறை சாா்ந்த 200 பணியாளா்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனா். தேவைப்படும் பட்சத்தில் கோவை மாவட்டத்திலிருந்தும் பணியாளா்கள் வரவழைக்க–ப்படுவா் என்றார்.

    ×